ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி .
புத்தகங்களுக்கான கண்காட்சி ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வருகிறது. மதுரை மீனாட்சி புக் ஷாப், - பிரதர்ஸ் மீடியா பிரை வேட் லிட் இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.
மே 5 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைநடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ்மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
உலக அளவில் நாம் வியக்கும் சான்றோர்களின் வாழ்வில் மாற்றம் என்பது புத்தகங்களை வாசித்ததில் இருந்து தொடங்கியுள்ளது.
புத்தகங்களை தேடி வருவது என்பது ஒவ்வொரு முறை புதிய அனுபவம். டிஜிட்டல் பத்திரிகைகளில் இந்த வாசிப்பின் சுவை கிடைக்காது. வாழ்க்கை அனுபவங்களில் கிடைக்காத உண்மைகளும் புதிய உலகங்களையும் புத்தகங்களில் இருந்து கண்டு வருகிறோம். எண்ணங்கள் நேர் பெறுவதற்கு புத்தகங்களே காரணம். உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும். நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பதால் உற்சாகம் பெறுவதோடு சரியான முடிவுகளை எடுக்க துணை புரியும். முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.
0
Leave a Reply