25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரட் சில்லி (Bread Chilli)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரட் சில்லி (Bread Chilli)

தேவையான பொருட்கள்:

பிரட் - 5-6 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1-2
தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்/நெய் - வறுக்க
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

 
செய்முறை:
பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அவற்றைச் சிறிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பிரட் துண்டுகளைப் பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
மிளகாய் தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளைச் சேர்த்து, மசாலா அனைத்து பக்கங்களிலும் படுமாறுமிதமான தீயில் கிளறவும். இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும். 
பிரட் வறுக்கும்போது கருகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும், அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.
மிகவும் காரமாக விரும்பினால், பச்சை மிளகாயை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும்.

பிரட் சில்லி (Bread Chilli) என்பது மீதமுள்ள பிரட்களை வைத்து 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு மொறுமொறுப்பான மற்றும் காரமான மாலை நேர சிற்றுண்டி.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News