25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?

புயலின் தாக்குத லுக்கு தயாராக இருப்பதற்குப் பதிலாக அவை வேக மெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால்  எப்படியிருக்கும். ஆஸ்திரேலிய தேசிய பல்கலை பருவநிலை விஞ்ஞானிகள்ஒருதுணிச்சலானஉத்தியைமுன்வைக்கின்றனர்.அதாவது, கடல் புயல்கள் நிலத்தை அடையும் முன்பே அவற்றை பலவீனப்  படுத்துவது மட்டுமல்ல, தடுக்கவும் செய்யலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

 புயல் உருவாக அவசியமான, சூரிய ஒளியைத் தடுக்கும். நுண் துகள்களை வளிமண்டலத்தில் துாவுவதுதான் உத்தி.

இந்தத் துகள்கள், ''ஸ்ட்ராடோஸ்பிய ரிக் ஏரோசல்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை தூவினால், சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில், வளி மண்டலத்தின் மேல் அடுக்கு, சற்றே குளிர்ச்சியடையும்.

இந்த முறை, கடலின் மேற்பரப் பின் வெப்பநிலையை சற்றே குறைத்து, சூறா வளியின் ஆரம்பகால வளர்ச்சியை சீர்குலைக் கலாம் என்று, கணினி ஒத்திகைகள் (சிமுலே ஷன்) காட்டுகின்றன. இது நெருப்பிற்குஆக்சிஜனை மறுப்பது போன்றது.

இந்த யோசனை, இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இருப்பி னும், இது 'காலநிலை பொறியியல்' (climate engineering) அல்லது புவி பொறியியல் (geoengineering) எனப் படும் வளர்ந்து வரும் துறையின் ஒரு பகுதி யாகும். திட்டமிட்ட, மனிதத் தலையீடு கள் மூலம், தீவிர காலநிலை நிகழ்வு களில், மாறுதல்களை ஏற்படுத்தும் உத்திகள் இவை.

வெப்பமயமாதல் காரணமாக சூறாவளி கள் மிகவும் அழிவுகர மானதாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறி வருகின்றன. இதனால், புயல்கள் அதிக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கும் வாய்ப் புகளும் அதிகரித்துள் ளன. அதற்கு முன் பாதுகாப்பு உத்திகளை ஆராய்வது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News