சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ்: இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!
செயின்ட் லூயிஸ் (அமெரிக்கா): 'கிராண்ட் செஸ் டூர்' 11-வது சீசன் மொத்தம் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 5-வது மற்றும் கடைசி தொடரான 'சின்க்யூஃபீல்ட் கோப்பை' செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டிக் களம்:
நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள உக்ரைனின் சிந்தரோவை எதிர்கொண்டார்.
வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியின் 67-வது நகர்த்தல் வரை இரு வீரர்களும் சமநிலையில் இருந்தனர்.
பின்னர் 82-வது நகர்த்தலில் சிந்தரோவ் செய்த சிறிய தவறைச் சரியாகப் பயன்படுத்திய பிரக்ஞானந்தா, இறுதியில் 95-வது நகர்த்தலில் அபார வெற்றி பெற்றார்.
0
Leave a Reply