பூமியின் சமநிலையை காக்கும் கரப்பான் பூச்சிகள் .
பலருக்கும் விருப்பமில்லாத உயிரினமாகத் தோன்றும் கரப்பான் பூச்சிகள், இயற்கைச் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சி இனத்தைச் சேர்ந்த இவற்றில் சுமார் 4,600 வகைகள் உள்ளன.
கரப்பான் பூச்சிகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் அவற்றின் உடல் திரவம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இவை மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் மட்டுமின்றி, காடுகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சூழல்களிலும் வாழ்கின்றன.
சில வகை கரப்பான் பூச்சிகள் 8 சென்டிமீட்டர் வரை நீளமும், சுமார் 35 கிராம் வரை எடையும் கொண்டிருக்கலாம். இவை அழுகிய பொருட்களைச் சிதைத்து மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும், இயற்கைச் சுழற்சியில் பங்களிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கரப்பான் பூச்சிகள் முற்றிலும் அழிந்துவிட்டால், காடுகளின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும். மேலும், அவற்றை உணவாகக் கொண்டுள்ள பறவைகள், பல்லிகள், தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். இதனால் மண்ணின் தரமும் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே, இயற்கையின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை கரப்பான் பூச்சிகளின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
0
Leave a Reply