தென்னை விவசாயிகள் சுருள் வெள்ளை ஈக்கள் பிரச்னையால் பாதிக்கப் பட்டு வருவது அதிகரித்து உள்ளது.
ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி தென்னை விவசாயம் நடக்கிறது. இவற்றில் 50 சதவீத பரப்பில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து பரவி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.வெள்ளை ஈக்கள் பாதிப்பு 2016 பரவ துவங்கியது முதல் மரங்களில் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கட்டுப் படுத்த அரசு கூறும் வழி முறைப்படி பின்பற்றியும் பலனில்லை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மழைபொழிவு இல்லாதது காற்றின் தாக்கம் போன்றவை இவை வேகமாக பரவுவதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் இறங்குவதுடன் விவசாயிகளை இணைத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply