25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >>


இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்  இணைந்து பெருமையுடன் கொண்டாடும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடும்"சுதந்திர தினவிழா"

நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா

(REWA வின் 49வது நிகழ்ச்சி)

நாள் : 15-08-2026 சனிக்கிழமை

நேரம் : காலை 10-00 மணி

இடம் :

மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்

சிறப்புரை :

Dr.V. வெங்கட்ராமன் அவர்கள்

முன்னாள் முதல்வர். இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி.

விழா பேருரை :
Dr.V. ரகுபதி அவர்கள்

தலைவர், காந்திநிகேதன் ஆஸ்ரமம், T. கல்லுப்பட்டி.

சுதந்திரப் போராட்டத்தில் இராஜபாளையத்தின் பங்கு ஆர்பரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரே பயப்படும் அளவிற்கு தீவிரமாக அனைத்து போராட்டங்களும் 1905 வங்காள பிரிவினை முதல் 1947 சுதந்திரம் கிடைக்கும் வரை சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அன்னியநாட்டு துணிகளை புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது எதிர்ப்பு பிரச்சாரம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, போன்ற போராட்டங்கள் நடத்தி, பிரிட்டீஷ் காவல்துறை இரண்டுமுறை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு சாதி, மத, அரசியல் சாயம் சிறிதும் இல்லாமல் பூர்ண சுவராஜ் என்ற இலக்கை நோக்கி நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

பிரிட்டீஷாரே நமது இராஜபாளையத்தை பயங்கர நகரம் (Dangerous Town) என்று பதிவிடும் அளவிற்கு ஒற்றுமையாக அனைவரும் போராடி உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News