சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம்.
.தேவையான பொருட்கள
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)
வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது)
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
மைதா மாவு (வெளி கோட்டிங் செய்ய) - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வாணலியில் நெய் ஊற்றி, துருவிய தேங்காயை லேசಾಗಿ வதக்கவும்.
அதனுடன் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பொடித்த வெல்லம்
சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வரும்
வரை கிளறவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து, இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறு
உருண்டைகளாக உருட்டவும்.
மைதா மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு
பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் முக்கி, சூடான எண்ணெயில்
போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம். தயார்.
0
Leave a Reply