25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்!

ஒரே தாய் வயிற்றில் பிறந்து அக்கா,தம்பி, தங்கை, அண்ணன் என்று பாசத்துடன், ஒரு வித வித்யாசமும் இன்றி பெற்றோர்களிடம் வளர்ந்து வருகிறோம். ஒரு வீட்டில்இரண்டாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கவருபவர்கள் பெரிய குழந்தையிடம் உன் தம்பிப் பாப்பாவை நான் தூக்கிக் கொண்டுபோகிறேன் ,என்று சொன்னால் அக்குழந்தை கோபமாக நம்மைப் பார்த்து. தன் தம்பியைஅணைத்துக் கொள்ளும். ஏன்? தன் தம்பி தன்னை விட்டுப் பிரிந்துசென்றுவிடுவானே? என்ற பயம் கலந்த வருத்தம்.

கேவலம் நிலம், காசு, பணத்திற்காக, நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, அதே தம்பியை இழக்கத் தயாராகிறார்கள். சகோதர, சகோதரிகளே, உங்களுக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். அதை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைத்தவிர்த்து மூன்றாம் மனிதரை பிரச்சனை தீர்ப்பதற்கு அணுகுகின்றோம் என்றால்கதை கந்தல் தான். பூனைகளின் அப்பம் பிரச்சனைக்கு குரங்கு தீர்ப்பு சொன்னகதை தான். உங்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்றுஅலையாமல் உங்களிடையே பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமமான விஷயம்.

ஹர்ஷ வர்த்தனர் காலத்தில் நாட்டு நலத்திற்காக கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல்' என்ற சட்டம் இருந்தது. கையால் பொருளைத் திருடினானா? வெட்டு கையை கண்ணால் ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தானா? சிரித்தானா? கண்ணைத் தோண்டு! பல்லைத்தட்டு! என்று கடுமையான தண்டனையுடன் நாட்டைச் செம்மையாக ஆண்டு வந்தான். ஆனால் இந்த முறையை குடும்பபாசத்திற்கு நடுவே கொண்டு வருவார்கள் என்று அம்மன்னன் நினைத்திருக்கமாட்டார்.

சொத்தை மொத்தமும் விற்று கோர்ட், கேஸ் என்று அலைவேனே தவிர பைசா தரமாட்டேன் உடன்பிறப்பிற்கு என்று சொல்லும் அளவிற்கு, கொடூரம் கூடிக் கொண்டு விடுகிறது.இந்த தகராறில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகள் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசிற்காக, சண்டை போடுகிறார்களே? இதற்காகவா இந்த சொத்தை அரும்பாடு பட்டு சம்பாதித்தோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.

பூர்வீகச் சொத்தோ, உங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களோ ,ஏமாற்றப்பட்டு அநியாயமாக உங்கள் கைவிட்டுச் சென்றால், உங்கள் வாரிசுகளுக்கு எந்த விதத்திலாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டுமோ, அவர்களைச் சென்றடையும். சொத்துக்களுக்கு உண்மையான எஜமானரிடம் போய்ச் சேர வேண்டும் என்ற பாசம் இருக்குமாம், இது கதையல்ல நிஜம். இரண்டு தலை முறைக்குமுந்தியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள்.

இந்த அற்பகுணத்தை விட்டொழித்து அன்பு, அன்பு என்று அனைத்தையும் மன்னித்து, மறந்து, விட்டுக் கொடுத்து, "அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்" என்ற நல்லெண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடரலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News