தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருதிற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். அதன்படி பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக தங்களது பங்கினை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அந்தவகையில்2025ஆம்ஆண்டுடாக்டர்அம்பேத்கர்விருதுபெறவிரும்புவோர்,தங்களைப்பற்றியமுழுவிவரங்களுடன் https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/ annalambedkar_award_applnform_t_290824.pdf (or) https://tinyurl.com/ambedkaraward என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply