25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்

விருதுநகர் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல்- 2024 முன்னிட்டு, விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,  (19.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் 2024- க்கான வாக்குபதிவு இன்று  காலை 7.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்களார்கள் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் வாக்குபதிவினை செய்ய ஏதுவாக பல்வேறு விரிவான ஏற்பாடுகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும், குடிநீர், நிழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறை உதவியுடன் விரிவான பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7:00 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்ற வருகிறது.மேலும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்தவாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News