25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்  சேர்க்கைக்கு  விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர்  மாவட்டத்தில்   தூய்மைப் பணியாளர்கள்    மறுவாழ்வு     குறித்த மாவட்ட  அளவிலான  விழிப்புணர்வு   மற்றும்   கண்காணிப்பு   குழுவானது  23.06.2023 அன்று  ஏற்படுத்தப்பட்டுள்ளது.   குழுவானது   மூன்று   வருடத்திற்குள்      கலைக்கப்பட வேண்டும்.  எனவே   நடைமுறையில்   உள்ள  தூய்மை    பணியாளர்கள்    மறுவாழ்வு  குறித்த  மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு  மற்றும் கண்காணிப்பு  குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.   புதிய  குழு  அமைத்து   அக்குழுவிற்கு   மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள்  தலைவராகவும்,   மாவட்ட   ஆதி திராவிடர்  மற்றும்   பழங்குடியினர்  நல  அலுவலர்  செயல் உறுப்பினராகவும்  செயல்படுவார்கள்.

  இக்குழுவில்   நிரந்தர  உறுப்பினராக,  காவல் கண்காணிப்பாளர் , உதவி இயக்குநர்  பேரூராட்சிகள்,  அனைத்து   மாநகராட்சி   ஆணையர்   மற்றும்   நகராட்சி ஆணையர்கள்    மாவட்டத்தில்   இரயில்வே   துறையினைச்   சேர்ந்த  ஒரு  பொறுப்பாளர்  கெஜட்  அதிகாரி   மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர்  ஆகியோர்கள்  நிரந்தர உறுப்பினராக செயல்படுவார்கள்.மாநில    சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக  இருத்தல்  வேண்டும்  .அல்லது   மாநில  அரசால்  பரிந்துரை    செய்யப்படும்  விருதுநகர்   மாவட்டத்தினைச்  சேர்ந்த  இரண்டுக்கும் மிகாத நபர்கள்  உறுப்பினராக  இருத்தல் வேண்டும்.

  மனித  கழிவுகளை  அகற்றும்  தொழில்  செய்வதை   தடுத்தல்    மற்றும்   மறு  வாழ்விற்காக  பணி  மேற்கொள்ள  எண்ணிக்கையில்  4  பேருக்கு   மேற்படாத  சமூக ஆர்வலர்கள்  (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்) அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினராக  4 சமுக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 30.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News