25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது  திவ்யா தேஷ்முக் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது  திவ்யா தேஷ்முக் வென்றார்.

உலக செஸ் பைனலில் விளையாடிய கோப்பை இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இந்திய பெண்களின் திறமையை உணர்த்துகிறது.உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த்,2000,2002 என இருமுறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலககோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா.செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் திவ்யா. பைனலில் சக வீராங்கனை ஹம்பி இரண்டாவது இடம் பெற்றார். 

திவ்யா, மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை ஜிதேந்திரா தேஷ்முக்,தாய் நம்ரதா இருவருமே டாக்டர்கள். இவர்கள் வசித்த பகுதியில் கூடைப்பந்து, பாட்மின்டன், செஸ் பயிற்சி மையங்கள் இருந்தன.திவ்யாவுக்கு ஐந்து வயதிலேயே செஸ்மீது ஆர்வம் பிறந்தது.பெண்களுக்கான செஸ் தொடரில் உலக வீராங்கனை கோப்பை வென்ற இளம் எனபெருமை பெற்றார் திவ்யா,உலகசாம்பியன்ஷிப்பில் சாதித்த இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் 19, உள்ளார். 

ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி,செஸ் ஜாம்பவான் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியவீராங்கனையான திவ்யாவுக்கு வாழ்த்துகள்கூறினர்.ஹம்பி கடைசி வரைபோராடினார். இந்தியாவில் பெண்கள் செஸ் போட்டியை கொண்டாடும் தருணம். புதிய சாம்பியன் திவ்யா ரூ.43.33 லட்சம், ஹம்பி ரு. 30.33 லட்சம் பெற்றனர் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News