விம்பிள்டனில் ஜோகோவிச் வரலாறு; பெடரரின் சாதனையை எட்டினார்.
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெச்சை 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஜோகோவிச், 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். இது விம்பிள்டனில் அவர் பதிவு செய்த 105-வது வெற்றியாகும்.
இதன் மூலம், விம்பிள்டனில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர் என்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில், உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சனை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோவை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply