25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில விவசாயிகள் மற்றும் தோந்தெடுக்கப்பட்ட கிராம விவாசயிகள் மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில விவசாயிகள் மற்றும் தோந்தெடுக்கப்பட்ட கிராம விவாசயிகள் மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 91 கிராம பஞ்சாயத்துகளில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டர்  ஒன்றிற்கு 75% மானியத்தில் ரூ.7500/- மதிப்பிற்கு வீரிய ஒட்டு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் 110 எக்டர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200/- மதிப்பில் மா/சப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற  5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 18,330 எண்கள், 75 சதவீத மானியத்தில் ரூ.150/-க்கும் மீதி ரூ.50/- பயனாளிகளின்; பங்கு தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

 தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18,000/- மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய ஒட்டு மா, கொய்யா, எலுமிச்சை, கொடுக்காபுளி, சப்போட்டா போன்ற செடிகளுடன் இடுபொருட்களும் 110 எக்டர் பரப்பிற்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்   https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News