குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்
குழம்பு, ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு காரப் பொடி மற்றும் வெல்லம் ஒரு துண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க சரியாகிவிடும்.
பாசிப்பயறு கொண்டக்கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சவை கூடும்.
குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
டபுள் பீன்ஸ், ராஜ்மா, மொச்சை போன்ற பருப்புகளை வேகவிடும்போது உப்பு சேர்க்காமல் வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
எந்த சிப்ஸ் செய்வதாக இருந்தாலும் எண்ணெயில் வறுக்கும் பொழுதே தேவையான உப்பை சிறிது நீர் கலந்து தெளித்து, வறுத்து எடுக்க, உப்பு எல்லா இடத்திலும் சமமாக பரவி இருக்கும். வெளியில் எடுத்ததும் காரப்பொடி சிறிது சேர்த்து குலுக்கி விட ருசியான சிப்ஸ் தயார்.
0
Leave a Reply