25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத்திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கும் விதமாக புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். ---
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத்திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கும் விதமாக புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். ---

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (31.07.2024) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்க புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

புத்தக வாசிப்பை குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் புத்தக திருவிழா விரைவில் நடைபெற இருக்கிறது.
கடந்தாண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கினார்கள். இந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், புத்தக உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அன்றாடம் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகம் வாங்க வரும் மாணவர்களுக்கு, ஏற்கனவே உள்ள 10 சதவிகித தள்ளுபடியுடன், கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும்.  

அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்பவன் அறிவாளி. அனுபவங்களை எளிதாக பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி புத்தகங்கள் மட்டும்தான்.புத்தகங்கள் என்பது யாராவது ஒருவரின் அனுபவங்கள் அல்லது யாராவது செய்த தவறுகளின் மொத்த தொகுப்பு ஆகும். எது சம்மந்தமான புத்தகங்களை படிக்கும் போதும் அது குறித்தான ஆர்வங்கள் உண்டாகும். அதனால் ஒரு கனவு உருவாகும். அந்த கனவை அடைய வேண்டும் என்றால் அதற்கு தேவையான உழைப்பு, அதை பற்றி தேவையான அறிவு இவற்றையெல்லாம் இதுபோன்ற புத்தகவாசிப்பு உங்களுக்கு அளிக்கிறது.

மாணவர்கள் வரலாறு, கதை உள்ளிட்டவை குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் எவ்வாறு கிடைத்தது, பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, அதற்கு பின்னால் இருந்த போராட்டம் என்ன உள்ளிட்ட நிறைய பெண்கள் முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களும் இருக்கின்றன. இது போன்ற ஏதாவது ஒரு பகுதியில் நீங்கள் வருடத்திற்கு ஒரு புத்தகத்தில் இருந்து ஆரம்பித்தால் அறியாமை விலகும்.இந்த முயற்சி என்பது மாணவர்களை புத்தகங்கள் வாங்குவதற்கு ஊக்குவிப்பதற்கான செயல்பாடு. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி புத்தக திருவிழாவில் வந்து முடிந்த அளவிற்கு அதிகமான புத்தகங்களை வாங்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News