ராஜபாளையத்தில் விவசாயிகள் பெயரில் ,செங்கல் சூளைகளுக்கு விதி முறையை மீறி ,அதிக ஆழத்தில் வண்டல் மணல் கொள்ளை
மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாயிகளில் மண் அள்ளுவதற்கு தாசில்தார் அளவில் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகல் தெரிவித்தது. இதை அடுத்து அரசியல் வாதிகளின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட கண்மாயிகளில் விவசாயிகளை தவிர செங்கல் சூளை வியாபாரிகள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்படி அனுமதிக்கப்பட்ட கடவுச் சீட்டுகளை படி எடுத்து வைத்து 3 அடிக்கு பதில் அதிக ஆழம் கண்மாய்களில் மண் தோண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பெயரில் சூளைகளுக்கும், பல்வேறு வணிக பயன்பாட்டிற்கும் மண் அள்ளி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிக வருவாய் என்பதுடன் நடவடிக்கை என்பது கானல் நீர் ஆகி வருகிறது.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply