25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் சமூக சமநிலையுடன் வாழவும், பிறர் துணையின்றி தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், அவர்களின் நலன் கருதி கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளான உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.

மேலும், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும்,  ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் 1 மாற்றுத்திறனாளிக்கும், ரூ.26,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.2,400 மதிப்பிலான கால் தாங்கிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.3,000 மதிப்பிலான மடக்கு குச்சிகள் 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் திரு.பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News