25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கட்டிடத்திற்கான பாதுகாப்பு சுவர் கூட முடிக்காமல் அவசர அவசரமாக, ஊராட்சி ஒன்றிய கட்டிடத்  திறப்பு விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கட்டிடத்திற்கான பாதுகாப்பு சுவர் கூட முடிக்காமல் அவசர அவசரமாக, ஊராட்சி ஒன்றிய கட்டிடத்  திறப்பு விழா .

ராஜபாளையத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் தாலுகா அலுவலகம் அருகே புளியங்குளம் கண்மாய் கரையை ஒட்டி ரூ.3.41 கோடி செலவில் புதிய கட்டடப்பணி  கடந்த ஆண்டு  தொடங்கியது லேசானமழைக்கேதண்ணீர்தேங்கி நிற்கும் இப்பகுதியில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துள்ளார்.கட்டடத்துக்கான பாதுகாப்பு சுவர் கட்டி முடிக்கப்படாமலும் அலு வலகத்தின் பின்பகுதி சுவர்களுக்கான எந்த பணியும் தொடங்காமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய தலைவருக்கும், தங்கபாண்டியன், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கும், , ஊராட்சி ஒன்றிய தலைவருக்குமான உட்பூசலால்  தங்கபாண்டியன்,திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.முழுவதும் பணிகள் நிறைவடையாமல் திறந்து உள்ளது குறித்து ,பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

ராஜபாளையம்,சமுசிகப்புரம்  கண்மாய் நேரடியாககழிவுநீர் நீர்நிலைகளில் கலக்கவிடப்படுவது தான் எழுதப்படாத விதியாகஉள்ளது.  கழிவு கலக்கும் நீர்நிலைகளால் மண்வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.  இது எதிர்காலத்தில் உள்ளூர் நீராதாரத்தையும், மழைநீர் சேகரிப்பையும் கேள்விக்குறியாக்கும் ஆபத்து உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News