இந்திய அணி கட்டாக் டி-20 முதல் போட்டியில் வெற்றி பெற்றது .
தென் ஆப்ரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவரில் 74 ரன்னுக்கு தோல்வியடைந்தது.
ஹர்திக் பாண்ட்யா, 25 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது 'டி-20' போட்டி, டிச.11ல் சண்டிகரில் நடக்க உள்ளது.
0
Leave a Reply