25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா மெகா வெற்றி: 3 நாட்களிலேயே டெஸ்ட் முடிந்தது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா மெகா வெற்றி: 3 நாட்களிலேயே டெஸ்ட் முடிந்தது!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் 3-வது நாளிலேயே ஆப்கானிஸ்தானைச் சுருட்டி இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, லோகேஷ் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி சதங்கள், மற்றும் சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அரைசதங்கள் உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 564 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க தேவையான 364 ரன்களை நெருங்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஃபாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் 112 ரன்களுக்கு மீண்டும் சுருண்டது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 42 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வருகிற ஜூன் 13-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News