இந்தியாவின் பிரீத்தி, பிரியா. அருந்ததிஆசிய குத்துச்சண்டை போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் ஏஜி இம்மை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரீத்தி இறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான ஹூவாங்சியோளவா வென்னை (சீன தைபே) எதிர் கொள்கிறார்.
60 கிலோஎடைப்பிரிவின்அரைஇறுதியில்இந்தியவீராங்கனைபிரியா 5-0 என்றகணக்கில்மங்கோலியாவின் நமூன்மோன்கோரை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த பிரியா இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் உன் கியோங் வோனை சந்திக்கிறார். இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் ஒய்ஷா தோய் ராவை (உஸ்பெகிஸ்தான்) வென்று இறுதிப்போட்டியை எட்டினார்.
0
Leave a Reply