25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சர்வதேச, தமிழ்நாடு ஹாக்கி  போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச, தமிழ்நாடு ஹாக்கி போட்டிகள் .

சர்வதேச ஹாக்கி   

புரோ லீக் 6வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன . இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது  கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என  வெற்றி பெற்றது. 

 

பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது, இதில் இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது 

 

தமிழ்நாடு ஹாக்கி 

முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி ,தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

 

4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது.  

 

5-1 என்ற கோல் கணக்கில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சண்டிகார் அணி மணிப்பூரை தோற்கடித்து 2வது வெற்றியை தனதாக்கியது.  ஆந்திராவை மற்றொரு ஆட்டத்தில் ,தமிழக அணி 11-0 என்ற கோல் கணக்கில், 2-வது வெற்றியை பெற்றது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News