மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ,மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன் னோட்டமாக களிமண் தரையில் நடக்கும், இந்தபோட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண் டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டேனில் மெட்விடேவ் (ரஷியா). முசெட்டி (இத்தாலி), கேமரூன் நோரி (இங்கிலாந்து), அலெக்ஸ்டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் கால் பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோ விச் ஆகியோர் விலகியுள்ளனர்.
நேற்று இதன் பெண்கள் பிரிவு போட்டி தொடங்கி விட்டது.நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினாரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக், கனடாவின் விக்டோரியா எம்போகோ, ஒலிம்பிக் சாம்பிய னான சீனாவின் கின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, உக்ரைனின் ஸ்விடோலினா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆட உள்ளனர்.
மொத்த பரிசுத்தொகை இப் போட்டிக்கு ரூ.90கோடி யாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும்.
0
Leave a Reply