அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சட்ட மேதையான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் (14.04.2026) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சமத்துவ உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (13.04.2026) அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-14ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது,ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, அனைவரிடமும் சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் சமூக நீதி நிலவுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சாதி வேறுபாடுகளுக்கெதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
0
Leave a Reply