தமிழகத்தின் பரனிகா.தேசிய உள்ளரங்கு தட களத்தில் போல் வால்ட் போட்டியில் சாதனை படைத்தார் .
நேற்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ,தேசிய இந்தியாவில் முதன் முறையாக, தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், துவங்கியது. பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. தமிழகத்தின் பரனிகா, 4.22 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் கைப்பற்றினார்.
. தமிழகத்தின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவின் சித்ரவேல் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். 7.78 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஒடிஷா வீரர் சாருண் (7.80) தங்கம், ரயில்வேஸ் அணியின் டேவிட் (7.69) வெண்கலம் வென்றனர்.
தமிழகத்தின் பாலாஜி (16.74 மீ.,) ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார். பி.எஸ். எப்., அணியின் ரவி குமார் (17.17), உத்தரகாண்ட்டின் ஆதிஷ் (16.92) தங்கம், வெள்ளி வென்றனர்.
பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட, குண்டு எறிதல் தமிழகத்தின் அக்ஷயா (11.89 மீ.,) வெண்கலப் பதக்கம் வென்றார். கேரளாவின் டோனா மரியா (13.35), ஹரியானா வின் குஷ்பூ (12.03) முதல் இரு இடம் பெற்றனர்.
0
Leave a Reply