25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ரவா கேசரி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரவா கேசரி.

தேவையான பொருட்கள்-

1 கப் ரவை,1 கப் சர்க்கரை,1/4 கப் முந்திரி,1/4 கப் உலர் திராட்சை,சன் பிளவர் ஆயில் தேவையான அளவு,2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்,1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்,துருவிய பிஸ்தா தேவையான அளவு,நெய் தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.

நெய் உருகியதும் அதில் முந்திரியைப் போட்டு முந்திரி சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.

பின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து திராட்சை நன்கு ஊதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ,நெய் உருகிய பின் அதில் ரவையை போட்டு ,சுமார் 6 இலிருந்து 7 நிமிடம் வரை வறுக்கவும். (ரவை கலர் மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)

ரவை வறுபட்டதும் அதை எடுத்து வேறு ஒரு தட்டில் போட்டு பரப்பி ஆற விடவும்.

இப்பொழுது அதே pan ல் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5 மேஜைக்கரண்டி சன் பிளவர் ஆயில், 3 மேஜைக்கரண்டி நெய், மற்றும் 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். (கேசரி திகட்டாமல் இருப்பதற்காகவே நெய் பாதி அளவு மற்றும் எண்ணெய் பாதி அளவு சேர்த்துக் கொள்கிறோம்.)

தண்ணீர் கொதித்ததும் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவையை அதில் போட்டு கட்டி தட்டாமல் கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கப் அளவு சர்க்கரை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறி விடவும். பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறிய பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.

அடுத்து அதில் கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு ,கிளறி வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதில் சேர்த்து கிளறவும்.

பின்பு இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்தில்லோ எடுத்து வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா தூவி பரிமாறவும்.சூடான, சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News