தமிழகத்தின் ரீகன் தேசிய போல் வால்ட் போட்டியில், தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
தேசிய உள்ளரங்கு தடகள சாம்பி யன்ஷிப், இந்தியாவில் முதன் முறையாக, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில்,.நேற்று இரண்டாவது,கடைசி நாள் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டிகள் நடந்தது. தமிழகத்தின் ரீகன் கணேசன், 5.30 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.ராம்பீர் சிங் (4.85 மீ.,), பினீஷ் ஜேக்கப் (4.55) அடுத்த இரு இடம் பெற்றனர்.
தமிழகத்தின் ராபின்சன் ஆண்களுக்கான 'டிரி பில் ஜம்ப் 'போட்டியில் (14.67 மீ.,) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வென்றார். பெண்களுக்கான உயரம் தாண்டுதலில்,மூன்றாவது வாய்ப்பில் 1.71 மீ., தாவிய தமிழக வீராங்கனை கெவினா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். முதல் வாய்ப்பில் குஜராத்தின் பயல் (1.71)தங்கம் வென்றார்.
தமிழகத்தின் சாய் சிந்தனா 20வயதுக்குட்பட்டபெண்களுக்கான 400மீ., ஓட்டத்தில் (59.96 வினாடி ) தங்கம் வென்றார்.
.உ.பி.,யின் சலோனி குமாரிபெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் (53.73) தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். பஞ்சாப்பின் குரிந்தர்விர் சிங் ஆண்களுக்கான 60 மீ., ஓட்டத்தில் (6.60 வினாடி), தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
0
Leave a Reply