இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை
இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் முழுவதும் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் கடந்து சென்று வரும் நிலையில் இதற்காக காத்து நிற்கும் மாணவிகள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு வழி இன்றி சிக்கலை சந்திக்கின்றனர்.. ஏற்கனவே இருந்த கழிப்பறைகளில் பெண்கள் சுகாதார வளாகம் மட்டும் பஸ் ஸ்டாண்டின் பின்புறம் இடிக்காமல் விட்டுள்ளனர்.. .கட்டுமான பணி முடியும் வரையாவது பெண்கள், மாணவியர் பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தம் அருகே, தற்காலிக ம் சுகாதார வளாகம் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் என மக்கள் எதிபார்க்கின்றனர்.
0
Leave a Reply