25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சுரேஷ் கிருஷ்ணா  இயக்கும் சாய் பாபா படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுரேஷ் கிருஷ்ணா  இயக்கும் சாய் பாபா படம்

'அனந்தா என்ற தலைப்பில் சாய் பாபா பற்றிய பக்தி படத்தை  சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் விரைவில் ரிலீசாகிறது. 'அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங் களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது அனந்தா. இந்த பட விழாவில் பேசிய சுரேஷ் கிருஷ்ணா, "நான் புட்டபர்த்தி சென்றேன். இவ்வளவு ஆண்டுகள் எங்கே இருந்த, ஏன் வரலை, இப்ப வந்துட்டே என்று பாபா பேசினார். எனக்கு அழுகை வந்தது. ஒருநாள் அதிகாலை 3:30 மணிக்கு என் கன வில் பாபா வந்து விபூதியை கொட்டினார். தயாரிப்பாளர் கனவிலும் பாபா வந்து படம் பண்ணுவது பற்றி பேசினார். சத்யசாய் பக்தர்களுக்கும் இது முழுமையான பக்தி படமாக இருக்கும்'' என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News