விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.01.2026) அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி துவக்கிவைத்தார்.
அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் போட்டி, பலூன் ஊதுதல், எலுமிச்சை கரண்டி நடை ஓட்டம், நினைவு திறன் போட்டி, லக்கி வின்னர், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கண்கட்டி பானை உடைத்தல், நடனம், கவிதை வாசித்தல், நகைச்சுவை துணுக்குகள் சொல்லுதல், பாட்டுக்கு பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை வரவேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலர்கள் அனைவரும் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும், சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கல் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.
அரசு அலுவலர்கள் சமத்துவ பொங்கல் விழாவில், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இவ்விழாவில், அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,திட்டஇயக்குநர்மாவட்டஊரகவளர்ச்சிமுகமை திரு.வீ.கேசவதாசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply