திருமணம் நடக்க வேண்டுமா. சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசியுங்கள்.
திருவள்ளூர் மீஞ்சூர் அருகே உள்ள மேலுார் திருமணங்கீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு சிலை செய்வதற்காக பாறையை வாகனம் ஒன்றில் கொண்டு வந்தார் சிற்பி ஒருவர்.வழியில் அந்த பாறை மூன்றாக வெடித்தது. வருத்தம் அடைந்த சிற்பி, உயிரை விட நினைத்தார். அப்போது சிற்பிக்கு காட்சி தந்த அம்மன், உடைந்த பாறைகளில் மூன்று சிலையை வடி என உத்தரவிட்டாள். சிலைகள் சென்னை மேலுார், திருவொற்றியூர், இந்த திருமுல்லைவாயில் கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.இந்த அம்மன்களை பவுர்ணமி அன்று வழிபடுவது விசேஷம். ஞானசக்தியான வடிவுடையம்மனை வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.மலர் ஆடை அலங்காரம் செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். உச்சிக்கால பூஜையின் போது, அம்மனுக்கு சிவப்பு புடவை அணிவித்து பலாப்பழம் நைவேத்தியம் செய்ய நினைத்தது நிறைவேறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார் இங்கு பாடியுள்ளனர்.
0
Leave a Reply