ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி வரும், மந்தமாக நடைபெறும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்ட பணிகள்
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக இரண்டாவது நுழைவு பாதை, ஏற்கனவே உள்ள பாதையை விரிவுப்படுத்துதல், மாற்று திறனாளிகளுக்கான சுகாதார வளாகம், முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கூடுதல் கட்டடம், கண்கா ணிப்பு கேமரா, வாகன காப்பகம், லிப்ட், இரண்டாவது நடை மேம்பாலம், பயணிகள் உள் நுழைந்துவெளியே செல்வதற்கான தனி தனி வசதி என ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருவதுடன் பாதுகாப்பு கருதி ஏற்கனவே இருந்த பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வருவாய் அடிப்படையில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் என். எஸ்.ஜி 5 தரவரிசையில் இருந்து என்.எஸ்.ஜி 4 என்ற தரவரிசைக்கு முன்னேறி உள்ளது. ஓராண்டுக்கு மேல் நடக்கும் கட்டுமான பணி காரணமாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply