25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள்  17th november 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 17th november 2025

உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் பைனல்ஸ்உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில்,  பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்திபவார், உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்டமோவா மோதினர். உடல் நிலைகாரணமாக , ஒரு ஆண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பிய பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

இந்தியாவின் மீனாக்ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் போலட் அக்போட்டை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் (80 கிலோ), நரேந்தர் பெர் வால் (+90 கிலோ) வெற்றி பெற்றனர்.

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  எகிப்தில் நடக்கும் 25 மீ., 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர் பிரீத் சிங் (291.10 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.

உலக கோப்பை ஸ்னுாக்கர் லீக் போட்டிஓமனில் நடக்கும் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 3-0 என, பஹ்ரைனின் ஹேஷாம் அல்சாகரை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அத்வானி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான பில்லி ஜீன்கிங் கோப்பை டென்னிஸ்பெங்களூருவில் நடந்த 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி 0-2 என நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஏற்கனவே சுலோவேனியாவிடம் தோற்ற இந்தியா, பைனலுக்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News