25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் JUNE 21 ST
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் JUNE 21 ST

பாட்மிண்டன் 

தாய்லாந்தின் ஆசிய பாரா பாட்மின்டன் சாம் பியன்ஷிப் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் , ஜோடி 21-14, 21-11 என இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

செஸ் 

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட் பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஷம்சி தினை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

அர்ஜுன், ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். முதல் இருசுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (1.5 புள்ளி), பிரக் ஞானந்தா (1.5) 3, 4 வது இடத்தில் உள்ளனர். 

ஹாக்கி 

ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் இந்திய மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.

நேற்று நடந்த பெண்கள் போட்டியில் கர்நாடகா அணி 12-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை  வீழ்த்தியது. மற்றொரு  போட்டியில் ஹிமாச்சல் அணி, கேரளாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆண்களுக்கான போட்டியில் ஆந்திரா அணி 4-3 என கேரளா அணியை வீழ்த்தியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News