மரவள்ளிக்கிழங்கு லட்டு.
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு -500 கிராம்
வெல்லம் - 300 கிராம்
உடைத்த முந்திரி, திராட்சை.
தேங்காய் துருவல்,
ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு
உப்பு -சிறிதளவு.
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் நன்கு வேகவைத்து, மசித்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி, பாகாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
மசித்த மரவள்ளிக்கிழங்கு சூடாக இருக்கும் போதே, அத்துடன் வெல்லப்பாகு, தேங்காய்
துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து,நன்கு பிசைந்து உருண்டை
பிடிக்கவும்.
சுவையான, மரவள்ளிக்கிழங்கு லட்டு தயார். சிற்றுண்டிக்கு ஏற்றது. சாப்பிட சுவையாக
இருக்கும்.
0
Leave a Reply