25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையத்தில் 6-வது மைல் நீர்த்தேக்கம் நீர்த்தேக்கம் வறண்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் 6-வது மைல் நீர்த்தேக்கம் நீர்த்தேக்கம் வறண்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலையில் பெய்யும் மழை நீர் அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் குழாய் மூலம் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு வருகிறது. இந்த நீர் தேக்கத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் சென்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராஜபாளையம் நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றில் மழை பெய்யாமல் வறண்டு உள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தினசரி 50 லட்சம் தண்ணீரை திறந்து நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் போதிய அளவு மழை இல்லாததால் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பொது மக்களுக்கு சரியாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்வருகிற தண்ணீரை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்குவழங்குவதற்காக தண்ணீரை திறந்து விடுகின்றனர்.குடிநீரில் மருந்து அதிகம் கலப்பதால் தண்ணீரை பொதுமக்கள் குடிக்க அச் சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News