கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு காசோலையினை மாவட்ட ஆட்சியர்அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.03.2026) கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்படி 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 11.06.2025 அன்று ரூ.8,00,000/- ஆக உயர்த்தப்பட்டது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.8 இலட்சத்திற்கான காசோலையினையும், மேலும், கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினையும் என ஆக மொத்தம் ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply