பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நடத்தும் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாமானது விருதுநகரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 20.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை நடத்தயிருப்பதால் இந்த சேர்க்கை முகாமில் அவசியம் கலந்து கொண்டு நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் சேர்ந்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் National Apprenticeship Certificate (NAC) பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்கள் மற்றும் NCVT, SCVT மற்றும் COE முறையில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும், ஐடிஐ சான்று இல்லாத 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு, பாலிடெகனிக், பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் Fresher Apprentice ஆக நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியின் போது உரிய உதவித்தொகையும் வழங்கப்படும்.
NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. எனவே, உரிய கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply