25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில்  நடைபெற்ற 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (21.04.2025)  தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி, கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனை விரிவுபடுத்தும் விதமாகவும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாநில அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 16.04.2025 முதல் 25.04.2025 வரை மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி மற்றும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமில் தலா 50 மாணவர்கள் வீதம் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த  மொத்தம் 100 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News