25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி சட்டமன்றத் தொகுதி கட்டசின்னம்பட்டி கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி சட்டமன்றத் தொகுதி கட்டசின்னம்பட்டி கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (21.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில், அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்டசின்னம்பட்டி கிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அதனைப் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது, புதிய வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குத் தயாராக இருக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News