25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்திய தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளைத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளைத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறியுள்ள நிலையில் அக்கட்சிகளின் பெயர்களை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிபந்தனையின்படி, ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் தனது வரவு செலவுக் கணக்குளைத் தணிக்கை செய்து பெற்று, ஒவ்வொரு நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையை அடுத்த நிதியாண்டின் நவம்பர் மாதத்திற்குள்ளாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

 மேலும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சட்டமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள்ளும், நாடாளுமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 90 தினங்களுக்குள்ளாகவும் தங்கள் கட்சியின் தேர்தல் செலவின விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

 இவ்வாறு கணக்குகளைத் தாக்கல் செய்யாத 39 அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் இயங்குவதாகப் பதிவு செய்துள்ள ‘தேச மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற அரசியல் கட்சியானது, இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், எனவே இக்கட்சியை ஏன் பதிவுநீக்கம் செய்யக் கூடாது என சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் விசாரணை அறிவிப்பு அனுப்பியுள்ளார்.

 இக்கட்சியானது, தமது தரப்பிலான விளக்கத்தை அளிக்க 08.10.2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News