டி.என்.பி.எல். கிரிக்கெட்
டி.என்.பி.எல். தொடரில் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நெல்லை மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய நெல்லை அணி 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply