ரசம் சுவையாக இருக்க....
ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.
மாங்கொட்டைகளை தூர எறிந்து விடாமல், உப்பு தடவி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புளி இல்லாமல் ரசம் தயார் செய்து, அந்த ரசம் கொதிக்கும் போது இரண்டு மாங்கொட்டைகளை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி விட்டால், ரசம் சாப்பிட சுவையாக இருக்கும்.
மட்டன் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
பீன்ஸ், முட்டைக்கோஸ்,கூட்டு செய்யும்போது தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply