குழாய் உடைப் பால் வளைவில் தடுமாறும் வாகனங்கள்
இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் கோவில், ஆறு,மூலிகை சித்தர் மடம் ,அருகாமை பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மெயின்ரோட்டை அகலப்படுத்தி சீரமைத்தனர்.விவசாய தோப்பு பகுதிகளை நாடும் மக்கள் போக்கவரத்து அதிரித்தது முடங்கியார் பாலம் அடுத்து ரோடு வளைவில் மெட்ரிக் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருகிறது. மூன்று ரோடு சந்திப்பாக அமைந்த இந்த ரோட்டில் இருந்து விவசாய நிலங்களுக்கும், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புதூர் கிருஷ்ணாபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இணைப்பு ரோடாக இருந்து வரும் நிலையில் வாகனங்கள் சென்று மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்படை சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply