வேலவன் செந்தில்குமார்,அனா ஹத்சிங், தேசிய ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் 81வது சீசன் டில்லியில், ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் மோதினர். வேலவன் 3-1 (11-8, 11-9, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அபய் சிங், 2வது இடம் பிடித்தார்.
டில்லியின் அனாஹத் சிங், கோவாவின் அகன்ஷா சலுங்கே பெண்களுக்கான பைனலில், மோதினர். அனாஹத் 3-0 (11-7, 11-6, 11-4) என வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக (2023-25) கோப்பை வென்றார்
0
Leave a Reply