புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கும் நலங்கு மாவு.
கோடை காலங்களில் வியர்வை துர்நாற்றம் பொது இடங்களுக்குச் செல்ல சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு நலங்கு மாவு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நறுமணத்தை ஏற்படுத்தும் பல மூலிகைகளை சேர்த்து அரைத்து உபயோகிப்பதால் புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும்.
இது காய்ந்த ரோஜா, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, முல்தானி மெட்டி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புலாங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்த இந்த நலுங்கு மாவை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும்தேய்த்து குளித்தால் தொற்றுக்களை தடுத்து உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
0
Leave a Reply