விம்பிள்டன் இன்று தொடக்கம்.
இங்கிலாந்தின் லண்டனில் 139-வது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பட்டத்துக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
நடப்பு சாம்பியனான சின்னர் மீண்டும் கோப்பையை வென்றால் தனது 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவார். ஜோகோவிச் சாம்பியனானால் சாதனை 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வெரேவ், முதல் விம்பிள்டன் பட்டத்தை நோக்கி களமிறங்குகிறார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பெண்கள் ஒற்றையரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டனில் களமிறங்கும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. முதல் சுற்றில் அவர் ஆஸ்திரேலியாவின் மாயாவை சந்திக்கிறார். அரினா சபலென்கா, எலினா ரிபாகினா, நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா, அமண்டா அனிசிமோவா, கோகோ காப் உள்ளிட்டோரும் பட்டம் வெல்லும் வாய்ப்பில் உள்ளனர்.
ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தலா ரூ.44.80 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
0
Leave a Reply