25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வில் முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வில் முதலிடம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில் கடந்த கல்வியாண்டில் மூன்று பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வில் தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாறு மாணவி இந்துஜா, முதுகலை வணிகவியல் மாணவி  காயத்ரி மற்றும் இளங்கலைக்  கணிதவியல் மாணவி பிரகதீஸ்வரி ஆகியோருக்கு பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக மேதகு ஆளுநர் ஆர் என். ரவி அவர்கள்  சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  இளங்கலைக் கணிதவியல் பாடப் பிரிவை சேர்ந்த பாண்டி பிரியா, மாலினி மற்றும் நித்திய தர்ஷினி, இளங்கலை வணிகவியல் பிரிவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இளங்கலை இயற்பியல் பிரிவைச் சேர்ந்த ஜெபக்கனி, வணிக நிர்வாகவியல் பிரிவு சேர்ந்த சுபலட்சுமி, நீலவேணி ஆகியோரும் அடுத்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்று தமிழக ஆளுநர் அவர்களிடம் சான்றுகளை பெற்றுக் கொண்டனர். பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளைக்  கல்லூரி ஆட்சி மன்றக்  குழுச் செயலாளர் திரு கே.ஜி. பிரகாஷ்,  கல்லூரி முதல்வர் முனைவர் சி. ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராமராஜ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்கள்.

விருதுபெற்ற மாணவிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News